உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் அஷ்டமி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2019 01:11
உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் உள்ள ஷேத்திர பால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது.
மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை மூலவர் ஷேத்திர பால பைரவருக்கு 11 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரத்தில் காணப்பட்டார். பெண்கள் நெய் விளக்கேற்றி நாமாவளி, அர்ச்சனை, துதிப்பாடல்களை பாடினர்.பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
சாயல்குடி அருகே மாரியூரில் உள்ள பூவேந்தியநாதர் சமேத பவள நிறவல்லியம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. பைரவருக்கு 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பக்தர்கள் பஜனை பாடல்களை பாடினர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்திருந்தனர்.