மதுரை : மதுரை சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் ஹார்விபட்டி வரதராஜ பெருமாள், வில்லாபுரம் சங்க விநாயகர் கோயில்களில் குருவார சத்சங்கம் நடந்தது.கோயில் நிர்வாகி நல்லதம்பி முன்னிலை வகித்தார். வைரமணி திருவடி புகழ்ச்சி அகவல் பாராயணம் வாசித்தார். சன்மார்க்க சேவகர் ராமநாதன் ’ஈசனே உயிர் பிணி வைத்தியர்’ என்ற தலைப்பில் பேசினார். தங்கம் ஜோதி வழிபாடு நடத்தினர்.