வால்பாறை:வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த சங்காபிஷேக விழாவில், நுற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், கார்த்திகை மாதம் சோமவாரத்தை முன்னிட்டு, 108 சங்காபிஷேக விழா நடந்தது.
காசிவிஸ்வநாதர் சன்னதியில் நடந்த விழாவில், மாலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமமும், 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், சிறப்பு அலங்கார வழிபாடும் நடந்தது. பூஜையில் நுற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.