பதிவு செய்த நாள்
20
நவ
2019
01:11
அந்தியூர்: அந்தியூரில், பழமை வாய்ந்த செல்லீஸ்வரர் கோவிலில் உள்ள, வீரகால பைரவர் சன்னதியில், கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியில், சிறப்பு பூஜை, அலங்காரம் நடக்கும். நடப்பாண்டு விழா நேற்று (நவம்., 19ல்) கோலாகலமாக நடந்தது. முன்னதாக கடந்த, 12ல் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.
இதையடுத்து அஷ்ட பைரவ யாக பூஜை நடந்தது. எட்டு நாட்களில், அசிதாங்க பைரவர், உருபைரவர், சண்ட பைரவர் உட்பட எட்டு பைரவர்களுக்கும், வெண்கடுகு, மிளகு, கருஞ் சீரகம் கொண்டு சிறப்பு பூஜை நடந்தது. விழா நிறைவு நாளான நேற்று (நவம்., 19ல்), சம்ஹார பைரவராக, மூலவர் காட்சியளித்தார்.
இதையொட்டி காலை தொடங்கி இரவு வரை சிறப்பு யாக பூஜை நடந்தது. குறிப்பாக, 1,008 மூலிகைகள் மற்றும் மிளகு, வடை கொண்டு யாகம் நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பூசணி மற்றும் தேங்காய்களில் விளக்கேற்றி வழிபட்டனர்.