Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரவான் - பொங்கியம்மன் திருமண விழா ... மாசாணியம்மன் கோவிலில் ரூ. 34 லட்சம் காணிக்கை மாசாணியம்மன் கோவிலில் ரூ. 34 லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் ஐயப்ப சுவாமிக்கு நாளை ஆறாட்டு உற்சவம்
எழுத்தின் அளவு:
திருப்பூர் ஐயப்ப சுவாமிக்கு நாளை ஆறாட்டு உற்சவம்

பதிவு செய்த நாள்

21 நவ
2019
03:11

திருப்பூர் : வைரவிழா மண்டல பூஜை விழாவையொட்டி, திருப்பூர் ஐயப்ப சுவாமிக்கு, வீரராகவப்பெருமாள் கோவில் தெப்பக்குளத்தில், நாளை ஆறாட்டு உற்சவம் நடக்கிறது.

திருப்பூர் ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை வைரவிழா, கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான, ஆறாட்டு விழா, நாளை நடக்கிறது. அதிகாலை, 4:30 மணிக்கு, மகா கணபதி ேஹாம பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து, ஐயப்ப சுவாமி, வீரராகவப்பெருமாள் கோவிலுக்கு எழுந்தருளுகிறார்.ஆறாட்டு உற்வத்துக்கு பின், மாலை, 6:00 மணிக்கு, விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் இருந்து, சிறப்பு அலங்காரத்தில், ஐயப்ப சுவாமி பவனி செல்கிறார்.

பஞ்சவாத்தியம், செண்டை வாத்தியம், ஒயிலாட்டம், வானவேடிக்கை, அலங்கார வேடிக்கையுடன், நொய்யல் பாலம், சடையப்பன் கோவில், வாலிபாளையம், கோர்ட் வீதி, குமரன்ரோடு, டவுன்ஹால், ரயில்வே மேம்பாலம் வழியாக, ஐயப்பன் கோவிலை சென்றடைகிறது.விழாவையொட்டி, வரும் 23ம் தேதி துவங்கி, டிச., 28 ம் தேதி வரை தினமும் மாலை, 6:30 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை, ஐயப்ப பக்த ஜனசங்கம் மற்றும் ஸ்ரீதர்ம சாஸ்தா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.தெப்பக்குளம் தயார்பெருமாள் கோவில் தெப்பக்குளம். பாசி படர்ந்து, அசுத்தமாக மாறியிருந்தது. ஆறாட்டு உற்சவத்துக்காக, ஐயப்ப பக்தர்கள் சார்பில் நேற்று தெப்பக்குளம் சுத்தம் செய்யப்பட்டது. தெப்பக்குளம் சுத்தப்படுத்தப்பட்ட பின், துாய்மையான தண்ணீரால் நிரப்பப்பட்டது. குளத்துக்குள் இருந்த சில்லறை காசுகள் தனியே எடுத்து, வெயிலில் உலர்த்தப்பட்டன. அதன்பின், கோவில் உண்டலில் செலுத்தப்பட்டன. கோவில் அதிகாரிகள் யாரும் வராததால், முறையான அனுமதி பெற்று, பக்தர்களே இப்பணிகளை மேற்கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வண்ண ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சிருங்கேரி ஜகத்குரு விதுசேகர பாரதீ சுவாமிகள் 2 மணி நேரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி அருகே ஆதிவராஹி அம்மன் கோயிலில் உள்ள யோக நரசிம்மருக்கு சுதர்சன ஜெயந்தி ஆனி மாத சுவாதி ... மேலும்
 
temple news
நிலக்கோட்டை;திருச்செந்துார் முருகன் கோயில் கும்பாபிஷேகத்திற்காக திண்டுக்கல்மாவட்டம் நிலக்கோட்டை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar