பதிவு செய்த நாள்
22
நவ
2019
10:11
தேனி: அறநிலையத்துறையின் சார்பில் ஐயப்ப பக்தர்களுக்கு உதவிடும் வகையில் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் அருகே சபரிமலை தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக சென்னை, தேனி, புளியரை, களியக்காவிளை ஆகிய 4 இடங்களில் அறநிலையத்துறை சார்பில், தகவல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் இயங்கும் இவை ஜன., 31 வரை செயல்பட உள்ளது. பக்தர்கள் விபரங்களை தெரிந்து கொள்ள 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
வீரபாண்டி மையத்தில் கவுமாரியம்மன் கோயில் வரும் பக்தர்களுக்காக சபரிமலை செல்லும் துாரம், தங்கும் இடங்கள், தேவசம்போர்டு அதிகாரிகள் தொடர்பு எண்கள், 15 அறிவிப்புக்கள் அடங்கிய தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ளது. இதில் தகவல்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம். கோயில் செயல் அலுவலர் சுரஷே் கூறுகையில், சபரிமலை பக்தர்கள் இக்கோயிலில் தங்கிச்செல்லும் வகையில், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தகவல் மையத்தில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்,என்றார்.