பதிவு செய்த நாள்
22
நவ
2019
11:11
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், மெய்பொருள் நாயனார் குருபூஜை விழா நடக்கிறது. அதனையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு மெய்பொருள் நாயனாருக்கு 108 சங்காபிஷேகம், தீபாராதனை நடந்தது.
மாலை 5:00 மணிக்கு திருமுறை இசை அரங்கம், தில்லை கார்த்திகேய சிவாச்சாரியாரின் சமய சொற்பொழிவு, இரவு 8:00 மணிக்கு அம்பலவாணன் தலைமையில் சிவனடியார்கள் திருமுறை, இன்னிசையுடன் வீதியுலா நடந்தது.இன்று மெய்பொருள் நாயனார் சித்தி வளாக வழிபாட்டு மன்றம் சார்பில் 16வது ஆண்டு குருபூஜை விழா சித்தி வளாகத்தில் நடக்கிறது.காலை 8:30 மணிக்கு துறவிகள் மற்றும் அடியார்கள் பங்கேற்று, சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர். 9:15 மணிக்கு, மெய்பொருள் நாயனாருக்கு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. செத்தவரை சிவஜோதி மோன சித்தர் இடபக் கொடியை ஏற்றி விழாவை துவக்கி வைக்கிறார்.தொடர்ந்து சிவனடியார்கள் இட்டலிங்க ஆத்ம லிங்க மூர்த்திகளுக்கு அபிஷேகம், ஆராதனை, மலர் வழிபாடு நடத்துகின்றனர்.