கன்னிவாடி: கன்னிவாடி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில் ஏகாதசி சிறப்பு பூஜைகள் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு விசேஷ திரவிய அபிஷேகம் நடந்தது. துளசி, மலர் அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
செம்பட்டி கோதண்டராமர், சின்னாளபட்டி மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோயில்களிலும் ஏகாதசி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.