திருத்தணி : திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தினமும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்து, முருகனை தரிசிக்கின்றனர்.பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, காணிக்கையாக செலுத்துகின்றனர்.அந்த வகையில், 29 நாட்களில், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை கோவில் தக்கார் ஜெய்சங்கர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு கோவில் ஊழியர்களால் எண்ணப்பட்டது.இதில், 62 லட்சம் ரூபாய் ரொக்கம், 654 கிராம் தங்கம், 6,850 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.