பதிவு செய்த நாள்
26
நவ
2019
12:11
நத்தம்: நத்தம், கோவில்பட்டியில் உள்ள செண்பகவள்ளி அம்மன் சமேத கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை மாத 2 வது சோமவார விழாவை முன்னிட்டு சங்காபிஷேகம் நடந்தது. கணபதி ேஹாமத்துடன் விழா துவங்கி, கும்ப பூஜை மற்றும் சங்கு பூஜை நடந்தது. சிவலிங்கம் வடிவில் அமைத்த 108 சங்காபிஷேகம் நடந்தது. பின் கும்பத்திற்கான அபிஷேகம் நடந்தது. பால், பன்னீர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் மகா தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. செண்பகவள்ளி அம்மன் சன்னதியிலும் சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கன்னிவாடி: கன்னிவாடி அருகே சோமலிங்கபுரம் சோமலிங்க சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை சோமவாரத்தில் உலக உயிர்களின் நன்மைக்காக, சங்காபிஷேகம் நடைபெறும். நேற்று, இக்கோயிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. ஓம்கார விநாயகர், நந்தி, சோமலிங்கசுவாமிக்கு பல்வேறு திரவிய அபிஷேகம் நடந்தது. சிறப்பு ஆராதனைகளுக்குப்பின், சங்காபிஷேக பூஜை துவங்கியது. மெய்கண்ட சித்தர் குகையில் 108 சங்குகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் வேதி தீர்த்தம் நிரப்பப்பட்டு, மலர் அலங்காரத்துடன் விசஷே பூஜைகள் நடந்தது. பின்னர், மூலவர், நந்திக்கு சங்காபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.