மேச்சேரி: மாதந்தோறும் அமாவாசை நாளில், மேச்சேரி பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அலங் காரம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, இன்று கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு, அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்படுகிறது.
சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர் என்பதால், அவர்களுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.