Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆலம்பரை கோட்டையில் 900 ஆண்டுகளுக்கு ... பிறவி மருந்தீசர் கோவிலில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தானத்தால் வென்று நின்றவன் கர்ணன்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2012
11:04

திருப்பூர்: தா, பிதா, குரு, தெய்வம் ஆதரவு இல்லை என்றாலும், தானத்தால் வென்று நின்றவன் கர்ணன், என ஆன்மிக சொற்பொழிவாளர் சத்தியசீலன் பேசினார். ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், ஷண்முகானந்த சங்கீத சபா சார்பில் ஆன்மிக சொற்பொழிவு, திருப்பூர் குமாரசாமி மண்டபத்தில் நடந்தது. "ஒரு கொடையே தவம் ஆகிறது என்ற தலைப்பில் சத்தியசீலன் பேசியதாவது: ஒரு உயிருக்கு மாதா, பிதா, குரு, தெய்வம் என நான்கு துணை உண்டு. கர்ணனுக்கு தாய் துணை இல்லை; தந்தை யார் என்று தெரியாது. தேரோட்டி மகனாக வளர்கிறான். வில் வித்தை போட்டியில் விளையாட, அரச குலத்தினர் மறுப்பு தெரிவித்தபோது, துரியோதணன் ஆதரவு கொடுக்கிறான். பரசுராமன், கர்ணன் ஒரு அந்தணர் இல்லை; சத்திரியன் என்று தெரிந்ததும், நீ கற்றது அனைத்தும் உரிய நேரத்தில் மறந்து போவாய் என சாபமிடுகிறார். இதன் மூலம் கர்ணனுக்கு "குரு பாதுகாப்பும் இல்லாமல் போய்விடுகிறது. ரத போர் நடக்கிறது. காயம்பட்டு கர்ணன், கீழே கிடக்கிறான். தர்மம் கேட்டு கிருஷ்ணர், அந்தணர் வேடத்தில் வந்து தானம் கேட்கிறார். என்னிடம் இருப்பதை கேள் தருகிறேன் என கர்ணன் கூறுகிறான். இறைவனே கையேந்திய வரலாறு கர்ணனின் வரலாற்றில் வருகிறது. புண்ணியத்தை தானமாக கேட்கிறான், அந்தணர். அனைத் தையும் கொடுக்கிறான் கர்ணன். தானம் கேட்டு வந்த கிருஷ்ணன் கையில் கர்ணனின் ரத்தம் பட்டதும், கிருஷ்ணனுக்கு தானம் கொடுக்கும் குணம் வந்து விடுகிறது. "உனக்கு என்ன வேண்டும் கேள், என, கிருஷ்ணன் கேட்கிறார். "தானம் கேட்டு வருபவர்களுக்கு தானம் கொடுக்கும் இதயத்தை கொடு, என்கிறான் கர்ணன். தன்னம்பிக்கை இல்லாதவனால் சம்பாதிக்க முடியாது. கடவுளை நம்பாதவன் நாத்திகன் அல்ல; எவன் தன்னை நம்பவில்லையோ, அவன்தான் நாத்திகன். கர்ணன் தன்னை முற்றிலும் நம்புகிறான். கிருஷ்ணர் கர்ணனிடம் இதயத்தை தருகிறேன்; முக்தியும் பெறுவாய், என்றார். மரணத்தை கண்டு அஞ்சக்கூடாது. நான் செய்த காரியங்களை தெரிந்து கொண்டு நான் எங்கே போகிறேன். என தெரிந்தவன் கர்ணன். தாழ்ந்தவன், ஜாதி, மதத்தை கூறி இழிவு செய்யப்பட்டதால், அவன் தீயவனிடம் சென்று சேர்கிறான். மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நான்கு பேர் ஆதரவு இல்லை என்றாலும், கொடை, தானத்தால் வென்று நின்றவன் கர்ணன், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar