Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தானத்தால் வென்று நின்றவன் கர்ணன்! பேரம்பாக்கம் பெருமாள் கோவிலில் கருட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிறவி மருந்தீசர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2012
12:04

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியிலுள்ள பிறவி மருந்தீசர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் காலையில் வெகுவிமர்சையாக துவங்கியது. தொடர்ந்து, 25 நாட்களுக்கு பல்வேறு வாகனங்களில் ஸ்வாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சிவத்தலங்களில் பலவற்றுள் மேம்பாடுற்று, இந்திரன் முதலிய தேவர்களும், அகத்தியர் உள்ளிட்ட முனிவர்களும், ஒன்பான் கோள்களும் முசுகுண்டன் முதலிய பெருமன்னர்களும், சோமசர்மன், ஆலயக்கருப்பன் ஆகிய அடியவர் பெருமக்களும், நீரில் மூழ்கி "இறவா இன்பம் பெற்ற பிரம்மதீர்த்தம் முதலிய புனித நீர் பொய்கையும் சூழ்ந்து, "விளங்கா நின்ற வில்வாரணீயம் என, பெயர் பெற்ற திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் ஸ்வாமி, பெரியநாயகி அம்மனுடன் மேற்கு நோக்கி அமைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்திருத்தலத்தின் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்து, சிறப்பு அபிஷேக ஆராதனைக்கு பின் நந்தி பெருமானுடைய கொடியேற்றப்பட்டு நேற்றுக்காலையில் ஒன்பது மணியளவில் துவங்கியது. இதில், வரும் 23ம் தேதி தமிழக அரசின் போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் நடக்கும் மண்டகப்படிகள், புஷ்ப விமானத்தில் ஸ்வாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். வரும் 26ம் தேதி பக்தர்கள் வகையறா சார்பில் இந்திர விமானமும், 29ம் தேதி காலையில் வெண்ணெய் தாழியும், இரவில் வெள்ளி ரிஷப வாகன ஊர்வலமும் நடக்கிறது. 30ம் தேதி வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் கைலாச வாகனத்தில் ஸ்வாமி வீதியுலா, இரவு 10.15 மணிக்குமேல் தியாகராஜர் ஸ்வாமிகள் தேரோட்டத்தில் எழுந்தருள்கிறார். மே ஒன்றாம்தேதி காலை ஆறு மணி முதல் 6.40 மணிக்குள் திருத்துறைப்பூண்டி லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தேரோட்டம் நடக்கிறது. ஆறாம்தேதி இரவு குதிரை வாகனத்தில் ஸ்வாமி புறப்பாடும், எட்டாம்தேதி புஷ்ப வியாபாரிகள், தொழிலாளர்கள் சார்பில் தெப்ப உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நீதிமணி, தக்கார் சிவராம்குமார், கணக்கர் சீனிவாசன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர். இதையொட்டி சிவாச்சாரியார் சோமாஸ்கந்தனுக்கு கங்கணம் கட்டப்பட்டு சிறப்பு பூஜை ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar