Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சித்தர்கள் மலையில் படி கட்டும் பணி பாதூர் பிரத்தியங்கரா கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் பாதூர் பிரத்தியங்கரா கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவிசநல்லுாரில் கங்காவதரண மகோத்சவ நீராடல்
எழுத்தின் அளவு:
திருவிசநல்லுாரில் கங்காவதரண மகோத்சவ நீராடல்

பதிவு செய்த நாள்

26 நவ
2019
03:11

தஞ்சாவூர், திருவிசநல்லுார்  ஸ்ரீதரஐயவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று  கங்காவதரண மகோத்சவ நீராடல் நிகழ்ச்சியில், ஏராளமானோர் புனித நீராடினர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிசநல்லூரில் கிராமத்தில் ஸ்ரீதரஐயவாள் என்பவர் பல நுாற்றாண்டுகளுக்கு முன் பக்தி நெறி தவறாமல் வாழ்ந்து வந்தார். தன் தந்தைக்கு ததி கொடுக்க கார்த்திக்கை அமாவாசையான நாளில், ஏற்பாடுகளை செய்து, புரோகிதர்கள் சிலரை வரவழைத்தார். சம்பிரதாயப்படியான சடங்குகள் எல்லாம் முடிந்தார். புரோகிதர்களை நீத்தாராக பாவித்து வணங்கி, அவர்களுக்கு உணவிட்ட பிறகு தான் குடும்பத்தில் உள்ளவர்கள் பசியாற வேண்டும் என்பது ஐதீகம். அந்த நேரத்தில், ஐயாவாள் வீட்டு வாசலில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் பசியால் சுருண்டு விழுந்து கிடந்ததை பார்த்துவிட்டு, சமைத்து வைத்திருந்த உணவை எடுத்து, பசியால் மயங்கி கிடந்தவருக்கு அளித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த புரோகிதர்கள், இதற்கு பரிகாரமாக கங்கைக்கு சென்று நீராடி வந்தால் தான் இந்த பாவம் நீக்கும் என ஐயாவாளை சபித்தனர். ஐயவாளும் கங்கை சென்று நீராடி வர பல மாதங்கள் ஆகும். அதுவரை தந்தையின் பிதுர்கடன் தீராமல் அல்லவா இருக்கும் என்ன செய்வது என சிவனிடம் வேண்டினார். அப்போது ஐயாவாள் வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் கங்கை நீர் பொங்கியது. இந்த நீர் தெருவெங்கும் ஓடியதால் வீடுகள் அனைத்தும் நீரால் சூழ்ந்தது. உடனடியாக மக்கள் ஐயவாளிடம் வந்து முறையிட்டு கங்கையை அடக்குமாறு வேண்டினர். அதே போல் ஐயாவாளும் செய்தார். இதையடுத்து,  ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை அமாவாசை தினத்தன்று கங்காவரதண மகோத்சவம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று அதிகாலை 4.30 மணி முதல் புனித நீராடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் நீராடினர். பின்னர் காவிரி ஆற்றுக்கு சென்று அங்கும்  நீராடி மடத்துக்கு ஈரத்துணியோடு வந்து மடத்தில் சிறப்பு அலங்காரத்தில் உள்ள ஸ்ரீதர ஐயவாளை வழிபட்டனர்.

நீலவேம்பு: மாவட்ட சித்த மருத்துவத்துறை சார்பில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக, புனித நீராட வந்த பக்தர்கள் 5,250 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: ‘‘திருப்பரங்குன்றம் மலை மீது செல்லும் பாதையில் பழநி ஆண்டவர் கோயில் அருகிலுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar