பதிவு செய்த நாள்
27
நவ
2019
02:11
திருவொற்றியூர் : தியாகராஜ சுவாமி கோவில், ஆதிசேஷ தீர்த்த குளத்தில் நடந்த உழவாரப் பணியில், 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்று, குளத்தை சுத்தம் செய்தனர்.
திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடைஅம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இக் கோவிலின் வெளியே, ஆதிசேஷ தீர்த்த குளம் உள்ளது. இது, தண்ணீரின்றி புதர்மண்டி காட்சியளித்தது.இதையடுத்து, குளத்தை சுத்தம் செய்யும் பணி, நேற்று முன்தினம் (நவம்., 25ல்) துவங்கியது.
ஆதிபுரீஸ்வரர் சேவா சங்கம் சார்பில் நடந்த பணியில், சத்ய சாய் மேல்நிலைப் பள்ளி மற்றும் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் ஈடுபட்டனர்.இதை பார்த்து, மற்ற தன்னார்வலர்களும் குளத்தை சுத்தம் செய்ய முன்வர வேண்டும் என, நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்நிகழ்வில், சிவனடியார்கள், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.