பெண்ணாடம் : ஐப்பசி மாத சர்வ அமாவாசையை முன்னிட்டு, பெண்ணாடம், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், மாரியம்மன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
இதையொட்டி, நேற்று (நவம்., 26ல்) காலை 9:00 மணியளவில் மூலவர் வரதராஜ பெருமாள், செங்கமலத்தாயார் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, காலை 10:00 மணி யளவில் கோவில் வளாகத்தில் உள்ள மாரியம்மன் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், திரவியபொடி ஆகிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது. புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமிக்கு காலை 10:45 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.