பதிவு செய்த நாள்
27
நவ
2019
03:11
குளித்தலை: அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில், இரண்டாம் சோம வாரம் நிகழ்ச்சியில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். குளித்தலை அடுத்த, சத்திய மங்லம் பஞ்., அய்யர்மலை, 108 சிவதலங்களில் மேற்கு நோக்கி அமையப்பெற்ற சிவதலமாகும். இந்த சிவதலம், 1,017 படிகட்டுகளை கொண்ட மலை உச்சியில், சுரும்பார் குழலி உடனுறை ரெத்தினகிரீஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
இக்கோவிலில் உள்ள மலையை, திருவாட்போக்கிநாதர் மலை, மாணிக்கமலை, காகம் பறவாமலை என்றெல்லாம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இம்மலை, 220 ஏக்கர் நிலப்பரப்பில், 4 கிலோமீட்டர் சுற்றளவில் அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் கார்த்திகை மாதத்தில், ஒவ்வொரு திங்கட்கிழமையன்று நடைபெறும் சோமவார விழாக்கள், சித்திரை மாதத்தில், 13 நாட்கள் நடைபெறும் தேர்த்திருவிழாவும் மற்றும் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்திலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வர்.
மேலும் முக்கிய நாட்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறுகிறது. நேற்று (நவம்., 26ல்) இரண்டாம் சோமவாரம் நிகழ்ச்சியில் கோவில் குடிப்பாட்டுக்காரர்கள், பக்தர்கள், பொது மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.