பதிவு செய்த நாள்
27
நவ
2019
03:11
சேலம்: வெங்கடாஜலபதி கோவிலில், 16ம் ஆண்டு கார்த்திகை மாத பிரமோற்சவம் தொடங் கியது. சேலம், செவ்வாய்ப்பேட்டை வெங்கடாஜலபதி கோவிலில், கார்த்திகை மாத பிரமோற் வம், பெருமாள் தாயார் திருமஞ்சனம், பூர்வாங்க பூஜையுடன், நேற்று (நவம்., 26ல்) காலை தொடங்கியது.
இரவில், கஜலட்சுமி அலங்காரத்தில், தாயார் காட்சியளித்தார். தொடர்ந்து, திருப்பள்ளியறை யில் கண்ணாடி மாளிகையில் அருள்பாலித்தார். இன்று (நவம்., 27ல்) காலை, திருப்பாவை சேவையை தொடர்ந்து, மகாலட்சுமி அலங்காரம், இரவில் பட்டாபிராமன் அலங்காரத்தில், தாயார் காட்சியளிப்பார். நாளை (நவம்., 28ல்) காலை, மகாலட்சுமி அலங்காரத்தில் உள்புறப் பாடு, இரவில் தாயார் கருட சேவையில் சேவை சாதிக்கிறார்.
வரும், 29 மாலை திருக்கல்யாண உற்சவம், 30 காலை, 81 கலச ஸ்நபன திருமஞ்சனம், மஞ்சக் குளி உத்சவம், சூர்ணாபிஷேகம், மாலையில், தாயார் யோக நாராயணன் அலங்காரத்தில் உள்புறப்பாடு நடக்கும். டிச., 1 காலை, பூம்பல்லக்கில் உட்பிகார வலம் வருதல், மதியம், தீர்த்தவாரி, 108 லிட்டர் பால் அபிஷேகம், மாலை, ஊஞ்சல் மோகினி அலங்காரத்தில், 108 திருவிளக்கு பூஜை ஆகியவை நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகி கள், கட்டளைதாரர்கள் செய்துள்ளனர்.