கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் அடுத்த ஒதியத்தூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி ஊஞ்சல் ஊற்சவம் நடந்தது.
உற்சவத்தையொட்டி, முன்னதாக மாலை 7:00 மணி முதல் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நிகழ்ச்சியில், ஒதியத்தூர், திருமால்ராயபுரம் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.