மயிலம் : திருவக்கரையில் வக்கிரகாளியம்மன் கோவிலில் நேற்று (நவம்., 26ல்) அமாவாசை யை முன்னிட்டு ஜோதி தரிசனம் நடந்தது.மயிலம் அடுத்த வக்கிரகாளியம்மன், சந்திர மவுலீஸ் வரர் கோவிலில் நேற்று (நவம்., 26ல்) அமாவாசையையொட்டி, காலை 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கபட்டு வழிபாடு நடந்தது.
கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், வரதராஜ பெருமாள், சந்திரமவுலீஸ்வரர், குண்டலி மாமுனி, வக்கிரகாளியம்மன், வக்கிர சனி ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேக, வழிபாடு நடந்தது.