பதிவு செய்த நாள்
27
நவ
2019
03:11
விழுப்புரம் : விழுப்புரம், நாப்பாளைய தெருவில் உள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத் தில் 145வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவையொட்டி, நேற்று (நவம்., 26ல்) மாலை 5:30 மணிக்கு கொடி பவனியும், புனித பிரான் சிஸ் சவேரியார் ஆலய வளாகத்தில் கொடியேற்றம் மற்றும் திருப்பலி நடந்தது.
நிகழ்ச்சியை, கோணான்குப்பம், திருத்தல அதிபர் தேவசகாயராஜ் நடத்தி வைத்தார். இதை யடுத்து, தினமும் மாலை 5:30 மணிக்கு தேர்பவனியும், திருப்பலியும் நடக்கிறது. வரும் 1ம் தேதி மதியம் 1:00 மணிக்கு, தியானமும், மாலை 5:.30 மணிக்கு தேர்பவனியும் நடக்கிறது. தொடர்ந்து 3ம் தேதி, காலை 7:30 மணிக்கு பெருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலியை, புதுவை - கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் நடத்தி வைக்கிறார்.
மாலை 5:30 மணிக்கு, திருப்பலி, ஆடம்பர தேர் பவனி புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி, முதல்வர் சகாய அருள்செல்வம் தலைமையில் நடக்கிறது. கொடியேற்ற விழாவில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.