நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு பிரத்தியங்கராதேவிக்கு கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு நிகும்பலாயாகம் நடந்தது. நடுவீரப்பட்டு நரியன்ஓடை கரையில் உள்ள பாதாளகாளி மற்றும் பிரத்தியங்காரதேவி கோவிலில் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடந்தது.
இதையொட்டி, நேற்று முன்தினம் மதியம் 1:00 மணிக்கு பிரத்தியங்கராதேவி மண்டபத்தில் கலசம் ஸ்தாபனம் செய்யப்பட்டு, யாகவேள்விகள் துவங்கியது. மதியம் 1:30 மணிக்கு யாகத்தில் மிளகாய் வற்றல்கள் கொட்டப்பட்டு நிகும்பலா யாகம் நடந்தது. யாகவேள்வியில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலாவாக வந்து பிரத்தியங்கராதேவிக்கு கலச அபிேஷகம் நடந்தது. மதியம் 2:00 மணிக்கு பாதாளகாளிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, 2:15 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.