தியாகதுருகம் : ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேனாபிஷேகம் நடந்தது.கார்த்திகை அமாவாசையையொட்டி நடந்த நிகழ்ச்சியையொட்டி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு தேனபிஷேகம் நடந்தது. பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.திருமணம் நடைபெற வேண்டி பெண்கள், ஆண்கள் சுவாமிக்கு சாற்றிய மாலையை அணிந்து கோவிலை வலம் வந்து வழிபாடு நடத்தினர்.