கிருஷ்ணராயபுரம்: மாயனூர், செல்லாண்டியம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனூர் செல்லாண்டியம்மன் கோவில், காவிரி கரை அருகில் உள்ளது. கோவிலில், அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. நேற்று காலை அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது. கிருஷ்ணராயபுரம், மாயனூர், லாலாப்பேட்டை, மதுக்கரை பகுதி மக்கள் அம்மனை வழிபட்டு சென்றனர்.