ஈரோடு: மகாவீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா, சுதர்சன ஹோமத்துடன் துவங்கியது. ஈரோடு, வ.உ.சி., பூங்காவில், பிரசித்தி பெற்ற மகாவீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. டிச.,2ல் கும்பாபிஷேக விழா நடக்கிறது. சுதர்சன ஹோமத்துடன், கும்பாபிஷேக விழா நேற்று தொடங்கியது. மாலையில் முதல்கால யாக பூஜை நடந்தது. நாளை காலை இரண்டாம் கால யாக பூஜையை தொடர்ந்து, கோபுர கலசம் வைக்கப்படுகிறது. மாலையில் மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. வரும், 2ல் அதிகாலை, 4:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை நடக்கிறது. காலை, 6:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.