பதிவு செய்த நாள்
30
நவ
2019
02:11
திருப்பூர்:”இன்றைய காலகட்டத்தில், குழந்தைகள் ஆன்மிக அறிவுடன் வளர்க்கப்பட வேண் டும்,” என, புலவர் ராமலிங்கம் பேசினார்.திருப்பூர் காலேஜ்ரோடு ஸ்ரீஐயப்பன் கோவிலில், 60ம் ஆண்டு மண்டல பூஜை நடந்து வருகிறது. தினமும் மாலை, 6:30 மணிக்கு, கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நேற்று முன்தினம் (நவம்., 28ல்), ’ஆன்மிக பண்புகளை அதிகம் வளர்ப்பது குடும்பமா? கோவிலா?’ என்ற தலைப்பில், பட்டிமன்றம் நடந்தது.
அதில், நடுவராக இருந்த புலவர் ராமலிங்கம் பேசியதாவது:மக்கள், உறவினருடன் மகிழ்ந் திருக்க திருவிழாக்கள் நடத்தப்பட்டன. தற்போது, இயந்திரமயமாக குழந்தைகளை வளர்க் கின்றனர்; இதயமுள்ள மனிதர்களாக வளர்க்க வேண்டும். மனித நேய பண்புகளை வளர்ப்பது கோவில்களே.ஒழுக்க மேண்மையுடன் வாழ்வதே தேசத்தின் அடிநாதமாக விளங்குகிறது.
இன்றைய காலகட்டத்தில், பிள்ளைகள், ஆன்மிக அறிவுடன் வளர்க்கப்பட வேண்டும். தற் போதைய குழந்தைகளின் திறமைக்கு பஞ்சமில்லை. குழந்தைகள் முன், கணவன்-மனைவியாக இருக்கக்கூடாது; தாய் -தந்தையாக இருக்க வேண்டும்.சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், அரண்மனைகளுக்கு ஆசைப்படவில்லை; ஆலயங்கள் அமைக்கவே விரும்பினர். தாயும், தந்தையும் கண் கண்ட தெய்வமாக இருந்தாலும், ஆன்மிக பண்புகளை வளர்ப்பது கோவில்களே இவ்வாறு, அவர் பேசினார்.