கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் இந்தாண்டு நடக்கவுள்ள யானைகள் புத்துணர்வு முகாமில் பங்கேற்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை தயாராகி வருகிறது.13 வயதான யானை தெய்வானைக்கு நடைபயிற்சி, லாரியில் ஏறி, இறங்கும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
யானை உடல் பரிசோதனை, ரத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளும் டாக்டர்களால் முடிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. யானை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும், முகாமில் பங்கேற்க முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும் கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர். யானை பாகன்களுக்கும் உடல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முகாம் தேதி அறிவிக்கப்பட்டவுடன் யானை தெய்வானை செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.