பதிவு செய்த நாள்
30
நவ
2019
02:11
வில்லியனுார் : அரியூர் உலக வாழியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை (டிசம்., 1ல்) நடைபெறுகிறது.
வில்லியனுார் அடுத்த அரியூரில் அமைந்துள்ள உலக வாழியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை (டிசம்., 1ல்) காலை 10:30 மணியளவில் நடைபெறுகிறது.இதற்கான விழா கடந்த 26ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 27ம் தேதி வாஸ்து சாந்தியும், 28ம்தேதி அரியூர் தாமரை நகர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து கலசங்கள் புனித நீர் எடுத் தல் நிழ்ச்சியும், இரவு முதல் காலபூஜை, தீபாராதனை நடந்தது.நேற்று 29ம் தேதி காலை இரண்டாம் கால பூஜை, பூர்ணாஹூதி மற்றும் புதிய விக்ரகம் கரிக்கோலம் நடைபெற்றது.
இரவு மூன்றாம் கால பூஜை, தீபாராதனை நடந்தது. இன்று 30ம் தேதி காலை 8:30 மணிக்கு விசேஷ சாந்தி, 12:30 மணிக்கு நான்காம் கால பூஜை, தீபாராதனையும், இரவு 10:30 மணிக்கு ஐந்தாம் கால பூஜை மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.நாளை (டிசம்., 1ல்) காலை 5:30 மணிக்கு யாகசாலை பூஜை, 6:30 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு, 7:30 மணியளவில் ஐயனார், சப்தகன்னி களுக்கு கும்பாபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. தொடர்ந்து 9:30 மணிக்கு யாத்ராதா னம், கடம் புறப்பாடும் அதனை தொடர்ந்து 10:30 மணியளவில் விமான கும்பாபி ஷேகம், 11:00 மணியளவில் மூலவர் கும்பாபிேஷகம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.
கும்பாபிஷேக விழா முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, சுகுமாறன் எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி சேர்மன் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னி லையில் நடைபெறுகிறது.