ஈரோடு: சென்னிமலை அருகே, வரப்பாளையம் விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, டிச., 2ல் நடக்கிறது. இதையொட்டி நேற்று (நவம்., 29ல்) காலை கணபதி ஹோமத்துடன் பூஜை தொடங்கியது. பின் புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. நாளை டிச.,1ல் மாலை, 5:00 மணிக்கு யாக பூஜை, டிச.,2ல் காலை, 4:30 மணிக்கு யாக பூஜை, காலை, 6:00 மணிக்கு யாகசாலையில் இருந்து கலசங்கள் ஆலயம் வலம் வருதலை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையடுத்து அன்னதானம் வழங்கப்படுகிறது.