பதிவு செய்த நாள்
30
நவ
2019
02:11
திருப்போரூர்: திருக்கழுக்குன்றம், பெரிய தெருவில், பழமையான கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 2002, நவ., 29ல், ஆரிய வைசிய சங்கத்தின் சார்பில் கும்பாபிஷேகம் நடந்தது. ஆண்டுதோறும் கும்பாபிஷேக தின விழா நடத்தப்படுகிறது.அந்த வகையில், 17ம் ஆண்டு, கார்த்திகை மாதம், கும்பாபிஷேக தின விழா, நேற்று (நவம்., 30ல்) கோலாகலமாக நடந்தது.
விழாவையொட்டி, காலை, 7:30 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு மஹா அபிஷேகமும், 8:30 மணி க்கு, தீப துாப ஆராதனையும் நடந்தது.கும்பாபிஷேக தின விழாவையொட்டி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், ஆரிய வைசிய சங்க உறுப்பினர்கள் உட்பட பலர்பங்கேற்றனர்.