திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (டிச.,01) தொடங்கியது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, ஓதுவார்கள் திருமுறை இசைக்க, மேளதாளம் முழங்க, தங்க கொடிமரத்தில் காலை 6.14 மணிக்கு கொடியேற்றப்பட்டது. இதில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார், தங்க கொடிமரத்தின் முன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கொட்டும் மழையில் பக்தர்கள் குடையுடன் தரிசனம் செய்தனர். இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, டிச. 10 காலை பரணி தீபமும் அன்று மாலை மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது. அதனை தொடர்ந்து சுவாமியின் வீதியுலா நடைபெறும்.