Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை தீபத்திருவிழா ... பழநி முருகன் கோயிலில் பாலாலய யாகபூஜை துவங்கியது பழநி முருகன் கோயிலில் பாலாலய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாயூரநாதர் கோவிலில் மழைநீர்: பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
மாயூரநாதர் கோவிலில் மழைநீர்: பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

01 டிச
2019
08:12

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோவிலில் மழைநீர் புகுந்து, தேங்கியுள்ளதால் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான, அருள்மிகு அபயாம்பிகை சமேத மாயூரநாதர் கோவில் அமைந்துள்ளது. 275 தேவாரப் பாடல் பெற்ற சிவாலயங்களில் காவிரி தென்கரையில் அமைந்துள்ள 39வது தலமாக இக்கோவில் திகழ்ந்து வருகிறது. இந்த தலத்தில் அம்பாள் மயில் உருகொண்டு சுவாமியை வழிபட்டு சாபவிமோ சனம் பெற்ற தலமாகவும் இது விளங்குகிறது. அதனை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் முழுவதும் இத்தலத்தில் துலா உற்சவம் நடைபெறுகிறது. இக்கோவிலி ல் உள்ள பிரம்ம தீர்த்தம் சிறப்பு வாய்ந்தது. கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக மாயூரநாதர் கோயில் தீர்த்தக்குளம் நிரம்பி உள்ளது. இந்த குளம் நிரம்பினால் உபரிநீர் அருகிலுள்ள செட்டி குளத்திற்கு வடிவதுவழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கோவில் குளத்தில் இருந்து செட்டிகுளத்தில் தண்ணீர் செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் உபரிநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தீர்த்த குளம் நிரம்பி தண்ணீர் கோவிலுக்குள் புகுந்து அங்கேயே தேங்கி நி ற்கிறது. மேலும் கோவிலின் வடக்குமட வளாகத்தில் இருந்து மழைநீரும் கோவிலுக்குள் புகுந்து தீர்த்த குளத்தின் தண்ணீருடன் சேர்ந்து சுவாமி, அம்பாள் சன்னதிகளில் முழங்கால் அ ளவுக்கு தேங்கியுள்ளதால் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்யமுடியாமல் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.பூஜைக்கு மட்டும் சிவாச்சாரியார்கள் தண்ணீரை கடந்து கோவிலுக்குள் சென்று வருகின்றனர். மூன்று நாட்கள் தொடர் மழையால் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகமும் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வே ண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் கோவில் குளத்தில் இருந்து தண்ணீர் வடிய வசதியாக செட்டி குளத்திற்குச் தண்ணீர் செல்லும் பாதையில் உள்ள ஆக்கி ரமிப்புகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக அகற்றிட வேண்டும் எனவும் அப்பகுதி மக்களும், பக்தர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; கன்னட இசையின் முன்னோடியான புரந்தர தாசரின் மூன்று நாள் ஆராதனைப் பெருவிழா, திருமலை திருப்பதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar