மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோவிலில் மழைநீர் புகுந்து, தேங்கியுள்ளதால் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான, அருள்மிகு அபயாம்பிகை சமேத மாயூரநாதர் கோவில் அமைந்துள்ளது. 275 தேவாரப் பாடல் பெற்ற சிவாலயங்களில் காவிரி தென்கரையில் அமைந்துள்ள 39வது தலமாக இக்கோவில் திகழ்ந்து வருகிறது. இந்த தலத்தில் அம்பாள் மயில் உருகொண்டு சுவாமியை வழிபட்டு சாபவிமோ சனம் பெற்ற தலமாகவும் இது விளங்குகிறது. அதனை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் முழுவதும் இத்தலத்தில் துலா உற்சவம் நடைபெறுகிறது. இக்கோவிலி ல் உள்ள பிரம்ம தீர்த்தம் சிறப்பு வாய்ந்தது. கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக மாயூரநாதர் கோயில் தீர்த்தக்குளம் நிரம்பி உள்ளது. இந்த குளம் நிரம்பினால் உபரிநீர் அருகிலுள்ள செட்டி குளத்திற்கு வடிவதுவழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கோவில் குளத்தில் இருந்து செட்டிகுளத்தில் தண்ணீர் செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் உபரிநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தீர்த்த குளம் நிரம்பி தண்ணீர் கோவிலுக்குள் புகுந்து அங்கேயே தேங்கி நி ற்கிறது. மேலும் கோவிலின் வடக்குமட வளாகத்தில் இருந்து மழைநீரும் கோவிலுக்குள் புகுந்து தீர்த்த குளத்தின் தண்ணீருடன் சேர்ந்து சுவாமி, அம்பாள் சன்னதிகளில் முழங்கால் அ ளவுக்கு தேங்கியுள்ளதால் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்யமுடியாமல் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.பூஜைக்கு மட்டும் சிவாச்சாரியார்கள் தண்ணீரை கடந்து கோவிலுக்குள் சென்று வருகின்றனர். மூன்று நாட்கள் தொடர் மழையால் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகமும் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வே ண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் கோவில் குளத்தில் இருந்து தண்ணீர் வடிய வசதியாக செட்டி குளத்திற்குச் தண்ணீர் செல்லும் பாதையில் உள்ள ஆக்கி ரமிப்புகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக அகற்றிட வேண்டும் எனவும் அப்பகுதி மக்களும், பக்தர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.