Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விழுப்புரம் கோவிலில் லட்சதீப ... ஊட்டி முத்து மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆலய விதிப்படி உருமாறுகிறது கக்கன்ஜி கிராம கோவில்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2012
10:04

குன்னூர், ஏப்.20-உபதலை கக்கன்ஜி நகரில் அமைந்துள்ள செல்லாண்டி அம்மன் கோவில் ஆலய விதிப்படி பிரம்மாண்டமாய் உருமாறி வருகிறது. குன்னூர் அருகே உபதலை கக்கன்ஜி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்; துவக்கத்தில், இங்குள்ள மக்கள் செல்லாண்டி அம்மனை குல தெய்வமாக வழிபட்டு வந்தனர்; சிறிய மணிக் கூண்டில் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டு வந்தனர். பின், 6 அடி உயரம் கொண்ட வளைவான மேடை அமைத்து ஒரு கல்லை செல்லாண்டி அம்மனாக பிரதிஷ்டை செய்து, சுமார் 20 ஆண்டுகளாக வழிபட்டு வந்தனர். ஆண்டு தோறும் கரக உற்வசம் ஆடம்பரமாக நடத்தப்பட்டு வருகிறது. வார பூஜை, விசேஷ பூஜைகளும் நடத்தப்படுகின்றன. இருப்பினும், இக்கோவில் பிற கோவில்களை போன்று கோபுரத்துடன், ஆலய விதிப்படி இல்லாதது, பக்தர்கள் மத்தியில் மனசங்கடத்தை ஏற்படுத்தியது; விளைவாக, கோவிலை கோபுரத்துடன், ஆலய விதிப்படி உருமாற்ற திட்டம் தயாரிக்கப்பட்டு, தற்போது பணிகள் நடந்து வருகின்றன. ஸ்ரீதர் தலைமையில், கோவில் கட்டுமானப் பணிக் குழு தலைவர் மாரிமுத்து, சரவணமூர்த்தி, ஜெகநாதன் மேற்பார்வையில் ஊர் மக்கள், இளைஞர்கள் ஒத்துழைப்புடன் கோவில் கட்டுமான பணி நடந்து வருகிறது. நிர்வாகத்தினர் கூறுகையில், "வெறும் 5,000 ரூபாயில் கட்டுமானப் பணியை துவக்கினோம்; பலரும், தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவு, நன்கொடையில் சுமார் 10 லட்சம் ரூபாய் செலவில் கருவறை, கோபுரம், 32 அடி உயரம் கொண்ட ராஜ கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. கோவில் திருப்பணிக்கு ஆன்மிகவாதிகள், பக்தர்களின் ஆதரவை வரவேற்கிறோம், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவா: இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் வெண்கல சிலையை கோவாவின் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகாலி ... மேலும்
 
temple news
உடுப்பி; உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தரிசனம் தரிசனம் செய்தார். தொடர்ந்து ... மேலும்
 
temple news
மும்பை; காஞ்சி பீடாதிபதி பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை மும்பையில் உள்ள ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் 5ம் நாளானா காலை  உற்சவத்தில் கண்ணாடி ... மேலும்
 
temple news
பழநி: பழநியில் திருகார்த்திகை தீபத்திருவிழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் நேற்று (நவ.,27) மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar