பதிவு செய்த நாள்
03
டிச
2019
01:12
சென்னை : சென்னை, புறநகரில் உள்ள சிவாலயங்களில், நேற்று சங்காபிஷேகம் நடந்தது.
கார்த்திகை மாதம், சோமவாரத்தை முன்னிட்டு, சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது. இதையடுத்து, வடபழநி ஆண்டவர் கோவிலில் அருள்பாலிக்கும் சொக்கநாதருக்கு, கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, நேற்று மாலை, 4:30 மணிக்கு, 108 வலம்புரி சங்கினால், அபிஷேகம் செய்யப்பட்டது. அதேபோல, பெசன்ட் நகர், ரத்னகிரீஸ்வரர், மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள், சிவபெருமானை தரிசித்தனர்.