பதிவு செய்த நாள்
21
ஏப்
2012
10:04
கோவை : ஸ்ரீ சத்யசாய் பாபாவின் முதலாமாண்டு ஆராதனை மகோத்சவ நிகழ்ச்சிகள், வரும் 24ம் தேதி உலகெங்கும் நடக்கிறது. கோவை மாவட்டத்தில் மாவட்ட ஸ்ரீ சத்யசாய் நிறுவனங்கள் சார்பில், அனைத்து சமிதிகளிலும், நாளை முதல் வரும் 24ம் தேதி வரை, மூன்று நாள் இந்த மகோத்சவ நிகழ்ச்சி நடக்கிறது. நாளை, காலை 9.00 முதல் மதியம் 12.00 மணி வரை, ரேஸ்கோர்ஸ், வெஸ்ட் கிளப் ரோட்டில் உள்ள, சத்யசாய் மந்திர் வளாகத்தில், இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. மாலை 4.00 முதல், மாலை 6.30 மணி வரை, ஆர்.எஸ்.புரம், ராபர்ட்சன் ரோட்டில் உள்ள, நேரு வித்யாலயா வளாகத்தில் ரதோற்சவம் நடக்கிறது. பள்ளி வளாகத்தில் இருந்து புறப்படும் ரதோற்சவம், காந்திபார்க், தடாகம் ரோடு வழியாக சென்று, மீண்டும் பள்ளி வளாகத்திலேயே நிறைவடைகிறது. வரும் 23ம் தேதி, காலை 9.00 முதல் மதியம் 12.00 மணி வரை, ஆலாந்துறை அருகில் உள்ள, பெருமாள் கோவில் பதியில், கால்நடைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. பிற்பகல் 3.00 முதல் மாலை 6.00 மணி வரை, வடவள்ளி, டி.ஏ.யு.டி.ஏ., நகரில் உள்ள சத்யசாய் மந்திரில், ருத்ர பாராயணம், சாய் சகஸ்கரநாமம், சர்வ தர்ம பஜனை நடக்கிறது. மாலை 6.00 முதல் இரவு 8.00 மணி வரை, ஆர்.எஸ்.புரம், திருவேங்கடசாமி ரோட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில், நாமசங்கீர்த்தனம் நடக்கிறது. வரும் 24ம் தேதி, காலை 5.15 முதல் 6.30 மணி வரை, ரேஸ்கோர்ஸ், வெஸ்ட் கிளப் ரோட்டில் உள்ள, சத்யசாய் மந்திர் வளாகத்தில் ஓம்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனமும், காலை 7.30 முதல் 9.00 மணி வரை, வேகபாராயணமும், காலை 10.00 முதல் 11.00 மணி வரை, "என்னுள் உறையும் சாயி எனும் தெய்வம் சிறப்புரையும் நடக்கிறது. மதியம் 12.00 முதல் 2.00 மணி வரை, சிறுவாணி, சீங்கப்பதி, செல்லப்பகவுண்டன் புதூர் கிராமங்களில் நாராயண சேவா நடக்கிறது. மாலை 6.00 முதல், இரவு 8.00 மணி வரை, ஆர்.எஸ்.புரம், திருவேங்கடசாமி ரோட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில், சாயிராம் குழுவினரின் "சாயி சத் சரிதம் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.