Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லை கோவிலில் கும்பாபிஷேகம்: ... வயிற்றில் மாவிளக்கு ஏற்றிய பெண்கள்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவையில் சத்யசாய் பாபாவின் முதலாமாண்டு ஆராதனை மகோத்சவம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஏப்
2012
10:04

கோவை : ஸ்ரீ சத்யசாய் பாபாவின் முதலாமாண்டு ஆராதனை மகோத்சவ நிகழ்ச்சிகள், வரும் 24ம் தேதி உலகெங்கும் நடக்கிறது. கோவை மாவட்டத்தில் மாவட்ட ஸ்ரீ சத்யசாய் நிறுவனங்கள் சார்பில், அனைத்து சமிதிகளிலும், நாளை முதல் வரும் 24ம் தேதி வரை, மூன்று நாள் இந்த மகோத்சவ நிகழ்ச்சி நடக்கிறது. நாளை, காலை 9.00 முதல் மதியம் 12.00 மணி வரை, ரேஸ்கோர்ஸ், வெஸ்ட் கிளப் ரோட்டில் உள்ள, சத்யசாய் மந்திர் வளாகத்தில், இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. மாலை 4.00 முதல், மாலை 6.30 மணி வரை, ஆர்.எஸ்.புரம், ராபர்ட்சன் ரோட்டில் உள்ள, நேரு வித்யாலயா வளாகத்தில் ரதோற்சவம் நடக்கிறது. பள்ளி வளாகத்தில் இருந்து புறப்படும் ரதோற்சவம், காந்திபார்க், தடாகம் ரோடு வழியாக சென்று, மீண்டும் பள்ளி வளாகத்திலேயே நிறைவடைகிறது. வரும் 23ம் தேதி, காலை 9.00 முதல் மதியம் 12.00 மணி வரை, ஆலாந்துறை அருகில் உள்ள, பெருமாள் கோவில் பதியில், கால்நடைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. பிற்பகல் 3.00 முதல் மாலை 6.00 மணி வரை, வடவள்ளி, டி.ஏ.யு.டி.ஏ., நகரில் உள்ள சத்யசாய் மந்திரில், ருத்ர பாராயணம், சாய் சகஸ்கரநாமம், சர்வ தர்ம பஜனை நடக்கிறது. மாலை 6.00 முதல் இரவு 8.00 மணி வரை, ஆர்.எஸ்.புரம், திருவேங்கடசாமி ரோட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில், நாமசங்கீர்த்தனம் நடக்கிறது. வரும் 24ம் தேதி, காலை 5.15 முதல் 6.30 மணி வரை, ரேஸ்கோர்ஸ், வெஸ்ட் கிளப் ரோட்டில் உள்ள, சத்யசாய் மந்திர் வளாகத்தில் ஓம்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனமும், காலை 7.30 முதல் 9.00 மணி வரை, வேகபாராயணமும், காலை 10.00 முதல் 11.00 மணி வரை, "என்னுள் உறையும் சாயி எனும் தெய்வம் சிறப்புரையும் நடக்கிறது. மதியம் 12.00 முதல் 2.00 மணி வரை, சிறுவாணி, சீங்கப்பதி, செல்லப்பகவுண்டன் புதூர் கிராமங்களில் நாராயண சேவா நடக்கிறது. மாலை 6.00 முதல், இரவு 8.00 மணி வரை, ஆர்.எஸ்.புரம், திருவேங்கடசாமி ரோட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில், சாயிராம் குழுவினரின் "சாயி சத் சரிதம் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒவ்வொரு அமாவாசையிலும் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்தது. ஆனிஅமாவாசை தீராத  பாவம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில், தியானலிங்கத்தின் 26 ஆவது ஆண்டு பிரதிஷ்டை தின விழா விமர்சையாக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; அரங்கநாதர் கோவிலில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணியதில், 50 லட்சத்து, 22 ... மேலும்
 
temple news
கோவை ; ஆனி அமாவாசை தினத்தையொட்டி கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: மதுரையில் கட்டுக்கோப்புடனும், ஒழுங்குடனும் நடந்த முருக பக்தர்கள் மாநாடு தமிழகத்தின் ஆன்மிக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar