சின்னமனுார்: பிரசித்தி பெற்ற குச்சனுார் சுயம்பு சனீஸ்வரர் கோயிலில், வாராந்திர திருமஞ்சனம் நடந்தது. தலைமை அர்ச்சகர் திருமலை ஜெயபால் முத்து, உதவி அர்ச்சகர் முத்து கண்ணன்நடத்தினர். உற்ஸவருக்கு சந்தனம், மஞ்சள், பச்சரிசி மாவு, பன்னீர், இளநீர், பால் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.