சென்னை : வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்கும் நம்பிக்கையில், பெண் பக்தர்கள் வயிற்றில் மாவு விளக்கு ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். எர்ணாவூர், அன்னை சிவகாமி நகரில் அருள்மிகு பீலிக்கான முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலின், 46ம் ஆண்டு தீ மிதி திருவிழாவையொட்டி, தினமும் அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மனுக்கு கோவில் வளாகத்தில் பெண்கள், பொங்கலிட்டும், வயிற்று வலி உள்ளிட்ட வயிறு சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து விடுபடுவதற்காக, கோவில் வளாகத்தில் சிறுக்குழந்தைகள் முதல் பெண்கள், ஆண்கள் வயிற்றுப் பகுதியில் மாவு விளக்கை ஏற்றி வழிபட்டனர். வரும் 21ம் தேதி பெண்கள், முளைப்பாரியுடன் அம்மன் அக்னிச் சட்டியை ஏந்தி கிராம தெருக்களில் அம்மன் உலா நிகழ்ச்சியும், வரும் 22ம் தேதிதீ மிதித் திருவிழாவும் நடக்கிறது.