பதிவு செய்த நாள்
07
டிச
2019
11:12
மணலி: மணலி, சிவ விஷ்ணு ஜோதி அய்யப்ப சுவாமி தேவஸ்தானம் கோவில், மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. மணலி, சிவ விஷ்ணு ஜோதி அய்யப்ப சுவாமி தேவஸ்தானம் கோவில், பழமை வாய்ந்தது. இக்கோவிலின், ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 2ம் தேதி, மஹா கணபதி பூஜை. பிரசாத சுத்தி, ரக்ஜோன ஹோமம், அஸ்தரா கலச பூஜை, வாஸ்து பலி, அத்தாழ பூஜை நடந்தது.தொடர்ந்து, மூன்று நாட்களும், உஷ பூஜை, ஆச்சாரிய வர்ணம், பிம்ப சுத்தி கலச பூஜை, லட்சார்ச்சனை, பிராப்த ஹோமம், மற்றும் உச்ச பூஜைகள் நடந்தன.
நேற்று காலை, கணபதி ஹோமம், உஷ பூஜை, பிரம்ம கலசாபிஷேகம் நடந்தது. 9:30 மணிக்கு, செண்டை மேளம் முழங்க, தந்திரி அண்டலாடி பரமேஸ்வரன் நம்பூதிரி தலைமையில், கலசம் புறப்பட்டது.அய்யப்பன், சிவன், குருவாயூரப்பன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, கோபுர கலசங்கள், ராஜ கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.அப்போது, கூடியிருந்த, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், சாமியே... சரணம் அய்யப்பா என, விண்ணதிர சரண கோஷங்கள் முழங்கினர்.