பதிவு செய்த நாள்
07
டிச
2019
01:12
தேனி: தேனியில் என்.ஆர்.டி.,நகர் கணேச கந்த பெருமாள் கோயிலில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
கவுரவத் தலைவர் டாக்டர் தியாகராஜன், தலைவர் அகிலா ஜூவல்லரி உரிமையாளர் தண்டபாணி, செயலாளர் தேனி பிளைவுட் ராஜசேகரன், பொருளாளர் பொறியாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். டாக்டர் வெங்கட் பிரபு, பொறியாளர் பாண்டியன், வழக்கறிஞர் ரமஷே், வர்த்தக பிரமுகர்கள் சுப்பிரமணியன், ரவி, ஜெயப்பிரகாஷ், கந்தபாண்டி, ஒருங்கிணைப்பாளர் கரியன் மற்றும் ஸ்ரீசாய் பக்த சேவா சங்க அறங்காவலர் குழுவினர், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.