காரைக்கால்: காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் பவித்ரோத்ஸ்வம் தொடங்கியது.
காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் ஒவ்வொரு கார்த்திகை மாதத்தில் பவித்ரோத்ஸ்வம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மூன்று நாட்கள் நடைபெறும் பவித்ரோத்ஸ்வம் கடந்த 6ம் தேதி புண்யாஹவாசனம், வாஸ்து ஹோமத்துடன் துவங்கியது. இன்று காலை. புண்யாஹவாசனம், கும்ப பூஜை ஹோமம். பவித்திர பிரதிஷ்டை, சாற்றுமறை தீர்த்த பிரசாதம் நடைபெற்றது. முன்னதாக ரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேத சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பவித்ரோத்ஸ்வம் சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் நித்ய கல்யாண பக்த ஜனசபாவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.