பதிவு செய்த நாள்
08
டிச
2019
03:12
புதுக்கோட்டை; அறந்தாங்கி அருகே, ஐம்பொன்னால் ஆன, அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கோங்குடியில் உள்ள, அம்மன் கோவில் பகுதியில், ஏப்ரலில், ஊராட்சி மன்றக்கட்டடம் கட்டுவதற்காக, பொக்லைன் இயந்திரத்தால், பள்ளம் தோண்டப்பட்டது.அப்போது, அம்மன், பைரவர், நடராஜர் என, ஏழு உலோக சிலைகள் மற்றும் பீடம் கண்டெடுக்கப்பட்டது. தற்போது பெய்து வரும் தொடர் மழையால், அந்த இடத்தில், நேற்று பள்ளம் ஏற்பட்டது. அதில், ஒரு அம்மன் சிலை புதைந்திருப்பது, தெரிய வந்தது. தகவல் அறிந்து வந்த, அறந்தாங்கி வட்டாட்சியர் பவானி, 5 கிலோ ஐம்பொன்னால் ஆன, 1 அடி உயர, அம்மன் சிலையை மீட்டு, அறந்தாங்கி சார் கருவூலத்தில் ஒப்படைத்தார்.