தமிழகத்தில் கார்த்திகை திருவிழா 2000 ஆண்டுகளுக்கு மேலாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீப வழிபாட்டிற்கு அகல் விளக்குகளே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. கார்த்திகை தீபத்தின் முதல் நாள் ஏற்றப்படும் தீபம் பரணி தீபமாகும். இது முருகனுக்குரிய வழிபாடு. மறுநாள் திருக்கார்த்திகை தீபம் சிவனுக்காக ஏற்றப்படுகிறது. கார்த்திகை அன்று பகலில் உண்ணாவிரதம் இருந்து மாலையில் வீட்டிலிருக்கும் எல்லா திருவிளக்குகளையும் ஏற்றி வாசலில் சிறு விளக்குகளை ஏற்ற வேண்டும்.