நம் முன்னோர்கள் எதை செய்தாலும் அதை மனித நல்வாழ்விற்கு வழிவகுக்கும் வகையில் விஞ்ஞான ரீதியாகவே செய்தார்கள். மனிதனின் நல்வாழ்வு அவனின் உள்நிலை வளர்ச்சிக்கு உதவுவதோடு முக்தியை நாடி செல்வதற்கு வழி செய்கிறது. இவ்வகையில் விளக்கு ஏற்றுவது முக்கியத்துவம் பெறுகிறது. வெளிச்சம் இல்லாவிட்டால் நம்மை சுற்றி இருக்கும் எதையும் நம்மால் உணர முடியாது. இதன் அடிப்படையில் நமக்கு ஒளி முக்கியம். இந்த தீபச்சுடர்கள் எங்கும் பிரகாசிப்பதை காணும்போது மகிழ்ச்சி பெருகுவதுடன் பக்தியும் சுரக்கும்.