காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், தாயார் குளம் பகுதியில், தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக் கோவிலில், தனியார் ஜவுளிக்கடை ஊழியர்கள் சார்பில், நேற்று, (டிசம்., 8ல்)106வது கூட்டு வழிபாடு நடந்தது.
இந்த வழிபாடு பூஜையை முன்னிட்டு, சிவ வாத்தியத்துடன் பன்னிரு திருமுறை புத்தகம் ஊர்வ லம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.அதை தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் தர்மலிங் கேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.