பதிவு செய்த நாள்
10
டிச
2019
10:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 1ல் தீப திருவிழா கொடியேற்றத்துன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை, 4:00 மணிக்கு சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து , அனேகன், ஏகன் என்பதை விளக்கும் வகையில் மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளன. இன்று மலை மீது ஏற்றப்படும் மஹா தீபத்திற்கு பயன்படுத்தப்படும், ராட்சதகொப்பரையை நேற்று மலை உச்சிக்கு செல்லப்பட்டது. மேலும் மஹா தீபம் ஏற்ற, 3,500 கிலோ நெய், 1,000 மீட்டர் காடா துணியால் ஆன, திரி தயார் செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.