வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா இன்று துவங்குகிறது. சொரியங்கிணற்றுப்பாளையம், மாரியம்மன்கோவில் 15 நாள் சாட்டாக கடந்த நவம்பர் 26 ம் தேதி இரவு சாட்டப்பட்டது. டிசம்பர் 3 ம் தேதி கும்பம் எடுத்தல், கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து காலை மாலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இன்று செவ்வாய்க்கிழமை காலை காவிரி தீர்த்தத்திற்கு புறப்படுதல், தொடர்ந்து மாலை 6 மணி அளவில் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.
புதன்கிழமை காலை 6 மணிக்கு மேல் பொங்கல் வைத்தல், 11 மணியளவில் தீர்த்த அபிஷேகம், மாவிளக்கு பூஜை செய்தல், இரவு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. வியாழக்கிழமை காலை 11 மணியளவில் பூவோடு எடுத்தல் அலகு குத்துதல் மாலை 6 மணியளவில் கம்பம்,கும்பம், கங்கை சென்றடைதல். தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் மறு அபிஷேகத்துடன் நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர்,12 கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.