பதிவு செய்த நாள்
10
டிச
2019
12:12
பழநி : பழநி மலைக் கோவிலில், இரண்டாவது, ரோப்கார் பணிகளை, பிரான்ஸ் நிபுணர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைக் கோவிலுக்கு செல்ல, வின்ச், ரோப்கார் வசதி உள்ளது. பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க, கூடுதல் ரோப்கார் திட்டம், 73 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரான்சை சேர்ந்த, போமா ஹைடெக் நிறுவனம், பணிகளை மேற்கொண்டுள்ளது. இட்காட்-, எரிக் நிறுவனங்கள், பணிகளை கண்காணிக்கின்றன. அந்நிறுவனங்களின் திட்ட மேலாளர்கள் குளோ மற்றும் ரவீந்தர்சிங் ஆகியோர் நேற்று, ரோப்கார் பணிகளை ஆய்வு செய்தனர். திட்டம் செயல்படுத்த உள்ள பகுதிகள், அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு நடந்தது.குளோ கூறுகையில், பணிகள் முடிக்கப்பட்டு, ஓராண்டுக்குள் ரோப்கார் பயன்பாட்டுக்கு வரும், என்றார்.