பதிவு செய்த நாள்
10
டிச
2019
12:12
கன்னிவாடி: கார்த்திகை சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர், உற்ஸவர், நந்திக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. விசஷே மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. திருவாசக பாராயணத்துடன், உற்ஸவர் பிரகார வலம் நடந்தது. விழாவில், அன்னதானம், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.வெல்லம்பட்டி மாரிமுத்துசுவாமி கோயில், பித்தளைப்பட்டி அண்ணாமலையார் கோயில், சித்தையன்கோட்டை காசிவிசுவநாதர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் பிரதோஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.