பதிவு செய்த நாள்
10
டிச
2019
12:12
மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகரில் உள்ள பாலமுருகன் கோவில் வளாகத்தில் உள்ள பாலமுகிலஷே்வரருக்கு நேற்று 108 சங்காபிஷேகம் நடந்தது.
அதனையொட்டி நேற்று மாலை நந்தி தேவனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின்னர் பாலமுகிலஷே்வரருக்கு வாசனை திரவியம், பால், தயிர், வெண்ணெய், நெய், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, 108 வலம்புரி சங்குகள் மூலம் சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். நந்திக்கும் பாலமுகிலஷே்வரருக்கும் பூ, பழம் உள்ளிட்ட பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.இதேப்போன்று ஆதிமூங்கில் துறைப்பட்டு, கடுவனுார், பாக்கம், புதுப்பட்டு, புத்திராம்பட்டு, புதுப்பேட்டை உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோஷ வழிப்பாடு நடந்தது.