புதுச்சேரி: கருவடிக்குப்பம் சித்தானந்தா சுவாமி கோவிலில், 108 சங்காபிஷேகம் நடந்தது. கருவடிக்குப்பம், குரு சித்தானந்த சுவாமி கோவிலில், கார்த்திகை மாதம் 4 வது சோமவாரத்தை முன்னிட்டு, குரு சித்தானந்த சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நேற்று நடந்தது. இதனையொட்டி, காலை 6:00 மணிக்கு சங்கு பிரதிஷ்டை, 6:30 மணிக்கு கணபதி ருத்ர ஹோமம், 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 9:00 மணிக்கு சங்காபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, சித்தானந்தா சுவாமிக்கு தீபாராதனை, இரவு அர்த்தஜாம பூஜை, சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை தேவசேனாபதி குருக்கள் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் செய்திருந்தனர்.